Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிக்கல் சிங்கார வேலர் கோயில் ... புத்தேரி பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி வருஷாபிஷேகம் புத்தேரி பெருமாள் கோவிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார திருநாள்
எழுத்தின் அளவு:
பரமக்குடி பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார திருநாள்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2026
11:04

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் நடந்தது.


ராமானுஜரின் 1009 வது அவதார திருநாள் நேற்று பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கொண்டாடப்பட்டது. இங்கு ஆழ்வார்கள் சன்னதியில் ராமானுஜர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீபெரும்புதுாரில் கி.பி., 1017 ல் அவதரித்த ராமானுஜர் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை திருக்கோஷ்டியூரில் உலகறியச் செய்தார். சித்திரை மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நேற்று காலை அபிஷேக ஆராதனைகள் நடந்தது.அப்போது உற்சவர் திருமேனி அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க வீதிவலம் சென்றனர். *இதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


*ராமானுஜரின் ஜென்ம நட்சத்திரம் நேற்று திருப்புல்லாணியில் கொண்டாடப்பட்டது. சித்திரை மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராமானுஜரின் ஜெயந்தி விழா நேற்று திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நடந்தது. ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது. உற்ஸவர் மற்றும் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவர் ஆதிஜெகநாதபெருமாள், பத்மாஸ்னி தாயார், பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயன ராமர் உள்ளிட்ட ஒவ்வொரு சன்னதியிலும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் ஸ்தானீக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், ராமானுஜர் இயற்றிய பாடல்களும் பாடப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், தயிர் சாதம் வெண் பொங்கல் வழங்கப்பட்டது. இரவில் உற்ஸவர் ராமானுஜர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு ரத வீதியில் உலா வந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை காக்கும் அய்யனார் கோயில் திருவிழா ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ராமானுஜர் ஜெயந்தி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar