பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
நகரி: காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் உண்டியலில், பக்தர்கள், 1.02 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அங்குள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், 30 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, நேற்று முன்தினம், கோவில் அதிகாரி, பூர்ணசந்திரராவ் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 1,02,14,955 ரூபாய் ரொக்கம், 120 கிராம் தங்கம், 660 கிராம் வெள்ளி, 82 வெளிநாட்டு கரன்சி ஆகியவை இருந்தன.