திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்துார் செல்வம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மண்டல் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேலு துவக்கினார். 33 விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக சென்று, செவ்வந்தி குளம் கண்மாயில் கரைக்கப்பட்டது.