Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி ... தைலாபுரம் அன்னை ஆலய தேர்பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம், திருவானைக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 செப்
2011
11:09

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழா தொடங்கியது. பக்தர்கள் ஏராளமானோர் திரண்டனர். ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடக்கும் நவராத்திரி உற்சவ விழா வெகுவிமரிசையுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு ஸ்ரீதாயார் தங்க மயமாக்கப்பட்ட கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் மூன்றாம் தேதி ஏழாம் நாள் திருவிழா அன்றைய தினம் ஸ்ரீதாயார் திருவடி சேவை நடக்கிறது. கண்கொள்ளா காட்சியை கண்டுதரிசிக்கும் பக்தர்களுக்கு செல்வ வளம் பெருகும் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். அக்., ஆறாம் தேதி ஸ்ரீரெங்கநாதர் ஸ்ரீகாட்டழகிய சிங்கர் கோவில் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அன்று மாலை தங்கக்குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் பக்தர்கள் புடைசூழ வீதி உலாவந்து வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான அரங்கனின் பக்தர்கள் கலந்துகொண்டு சேவிப்பார்கள். * திருவானைக்கோவில்: பஞ்சபூத திருத்தலங்களில் நீர்த்தலமாக போற்றி புகழப்படும் திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வர் கோவிலில் நவராத்திரி உற்சவவிழா நேற்று தொடங்கியது. ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி நாளை ராஜஅலங்காரத்திலும், மூன்றாம் தேதி சரஸ்வதி அலங்காரத்தில் ஐந்தாம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மிக விவாதம் பரதநாட்டியம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நவராத்திரி விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவில் இணை ஆணையர் ஆனந்த், தக்கார் சிவ அம்பலவாணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar