பரங்கிப்பேட்டை: புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நாளை (15ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 8ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 12ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், 13ம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜையும், இன்று 14ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக தினமான நாளை (15ம் தேதி) 6ம் கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானமும் தொடர்ந்து, கடம் புறப்பாடாகி காலை 7:31 மணியிலிருந்து 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.