சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வராகி அம்மன் வருடாபிஷேக விழா நடந்தது. சேவுகப்பெருமாள், ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். செப்.24ல் அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று அம்மனுக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் சின்னையா, சேவற்கொடியோன் பூஜைகளை நடத்தினர். வராகி அம்மன், சித்தர் முத்துவடுநாதரின் பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.