பதிவு செய்த நாள்
01
அக்
2016
12:10
பண்ருட்டி: திருவதிகை சரநராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு,மாதம் முழுவதும், மூலவர் பெருமாள் திருப்பதி திருமலையப்பனாக நெய்தீப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அமாவாசையை முன்னிட்டு, செப்.,30 காலை 6:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு,தோமாலை சேவை, 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் காளிங்க நர்த்தனர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு திருக்கண்ணாடி அறையில் அருள்பாலித்தார்.
மதியம் 1:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை, மாலை 4:00 மணிக்கு, நடைதிறப்பு, 6:00 மணிக்கு, தோமாலை, இரவு 9:00 மணிக்கு, அர்த்தஜாம பூஜை நடந்தது. விழாவில், கடலுார் ஆனந்தபவன் ஓட்டல் சார்பில், பக்தர்களுக்கு பிரசாத லட்டு வழங்கப்பட்டது. மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பதியில் தினமும் நடைபெறுவதுபோல் பூஜைகள் இன்று (1ம் தேதி) நடக்கிறது.காலை 11:00 மணிக்கு, அன்னக்கூட உற்சவத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.