பதிவு செய்த நாள்
06
அக்
2016
11:10
நகரி: காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள், 20 நாட்களில், 62.95 லட்சம் ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது காணிக்கையை, அங்குள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். அந்த வகையில், 20 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கோவில் அதிகாரி பிரம்மராம்பா முன்னிலையில், கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 62,95,863 ரூபாய் ரொக்கம், 266 கிலோ வெள்ளி, 53 கிராம் தங்கம் ஆகியவை இருந்தன.