Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ரமணர் ஆஸ்ரமத்தில் நவராத்திரி: ... கங்கை மண்ணால் செய்த துர்க்கைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறைக்கு சொந்தமானது 1,008 சிவன் கோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2016
11:10

சேலம்: சேலத்தில், 1,008 சிவன் கோவிலை கையகப்படுத்திய, இந்துசமய அறநிலையத்துறை, அதை, அறிவிப்பு பலகை வைத்து, தெரியப்படுத்தி உள்ளது. சேலம், அரியானூரில் பிரசித்தி பெற்ற, 1,008 சிவன் கோவில், ஆக்கிரமித்து கட்டப்பட்டதால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அக்கோவிலை, இந்துசமய அறநிலையத்துறை, செப்.,21ல் கையகப்படுத்தியது. அதற்கான நடவடிக்கையை, சேலம், டி.ஆர்.ஓ., சுகுமார் மேற்கொண்டார். கோவிலை கட்டி நிர்வகித்து வந்த, நிரந்தர அறங்காவலர்களான, அப்பகுதியில் உள்ள தனியார் பல்கலை வேந்தர் கணேசன், இணை வேந்தர் சரவணன் ஆகியோரை, அதே நாளில், சஸ்பெண்ட் செய்து, சேலம் அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உத்தரவிட்டார். தொடர்ந்து, கோவில் தக்காராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டு, 24ம் தேதி, பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி கூறியதாவது: கோவிலை கையகப்படுத்தியதற்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாறாக, செயல் அலுவலருடன் இணைந்து, இரு மாதங்களில், கோவில் நிர்வாகத்தை கவனிக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, செயல் அலுவலர் வழிகாட்டுதலின்பேரில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய செயல்பாட்டை பொறுத்து, கோவில் நடவடிக்கையில், அவர்களது பங்களிப்பு இருக்கும். எனவே, கோவில் இடம், வருவாய் துறைக்கு சொந்தமானது. அதனால், 1,008 சிவன் கோவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் மற்றும் வருவாய் துறையினர், அங்கு, கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar