பதிவு செய்த நாள்
25
அக்
2016
12:10
சென்னை: சென்னை, கோட்டை நுழைவாயிலில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று, அமைச்சர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அ.தி.மு.க.,வினர் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை நுழைவாயிலில் உள்ள அம்மன் கோவிலில், அமைச்சர்கள் வேலுமணி, ராஜு, துரைக்கண்ணு, ராமச்சந்திரன் தலைமையில், சிறப்பு பூஜை நடந்தது.இதில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.