Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருணாசலேஸ்வரர் கோவிலில் அலை மோதிய ... சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தேர் பழுது பார்க்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2016
12:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவை ஒட்டி, திருவீதி உலா வரும் பஞ்ச மூர்த்திகள் தேர் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவர். அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா, வரும் டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து டிசம்பர் 12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில் கொடியேற்றம் முதல் மஹா தீபம் ஏற்றப்படும் முக்கிய திருவிழா நடக்கும், பத்து நாட்களும், காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கும். திருவிழாவின், ஏழாம் நாளில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து செல்லும் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீதி உலா வருவர். இதற்காக, வீதி உலா வரும் தேர்களின் சக்கரம் பழுது பார்த்தல், வண்ணம் தீட்டுதல், மற்றும் சேதமடைந்த மரப்பொம்மைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கும். மேலும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வரும், 63 அடி உயர மஹா ரத சக்கரத்தை, பெல் நிறுவன இன்ஜினியர்களை கொண்டு ஆய்வு செய்து சான்றிதழ் அளித்த பின்பே, மஹா ரதம் வீதி உலா வரும். அதற்கான சான்றிதழ் பெறும் பணிக்காக, தேர் பழுது பார்க்கும் பணி துவங்கியுள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar