Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் மகா ... கோவில் கும்பாபிஷேகம்: மரக்கன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆட்டு ரத்தம் கலந்த காவு சோறு பானை ’லபக்’: அம்மன் கோவிலில் நடக்கும் வினோதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2016
12:11

பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவிலில், மேல் நோக்கி வீசப்படும் காவு சோறு பானையை, மரத்தில் இருக்கும் கருப்பணார் சுவாமி பிடித்துக்கொள்வதால், பானை திரும்ப கீழ் நோக்கி வராத வினோதம் நடக்கிறது. பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தத்தில், எட்டுப்பட்டி எல்லை பிடாரி அம்மன் கோவில் உள்ளது. அங்குள்ள ஆச்சா மரத்தில், கருப்பணார் சுவாமி இருப்பதாக, மக்கள் நம்புகின்றனர். வெளியேற்றம்: திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி, அந்த மரத்தில், தொட்டில் கட்டி, பக்தர்கள் வேண்டுதல் வைக்கின்றனர். நேற்று முன்தினம், குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள், அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும், கோவில் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அறிகுறி இல்லை: இரவு, புது பானை ஒன்றில், கோவில் பூசாரிகள் பொங்கல் வைத்தனர். ஆட்டு கிடா ஒன்றை வெட்டி, அதன் ரத்தத்தை பொங்கல் சோற்றில் கலந்து, காவு சோறு தயார் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு, பூசாரி, ஆச்சா மரம் முன் நின்று, காவு சோறு பானையை, மர உச்சியை நோக்கி வீசிவிட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை பார்த்தபோது, மரம் மீது வீசப்பட்ட காவு சோறு பானை, கீழே வந்து விழுந்ததற்கான அறிகுறி இல்லை. மரத்தில் இருக்கும் கருப்பணார், காவு சோறை பிடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

5 தலைமுறையாக...: பூசாரிகள் கூறியதாவது: ஆச்சா மரத்தில் உள்ள கருப்பணார், சக்தி வாய்ந்தவர். ஆண்டுதோறும் திருவிழா நடந்த இரவு, ஆச்சா மரத்தில் உள்ள கருப்பணாருக்கு, காவு சோறு போடப்படும். அந்த சோறு பானையை, மரத்தில் இருக்கும் கருப்பணார் பிடித்துக்கொள்வார். அதனால், பானை கீழ் நோக்கி வருவது இல்லை. இந்த வழக்கம், ஐந்து தலைமுறையாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar