பதிவு செய்த நாள்
09
நவ
2016
12:11
பள்ளிப்பட்டு : அத்திமாஞ்சேரிபேட்டை ஆபத்ரக் ஷ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம, வரும் 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை, நாளை மறுதினம் துவங்குகிறது. அத்திமாஞ்சேரிபேட்டை சின்ன பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது ஆபத்ரக் ஷ விநாயகர் கோவில், இந்த கோவில் சீரமைப்பு பணிகள், ஓராண்டாக நடந்து வந்தது. பணிகள் முடிந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜை, நாளை மறுதினம், காலை 10:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. வியாழக்கிழமை, காலை 8:00 மணிக்கு, புதிய சிலைகள் கரிக்கோல வலம் நடக்கிறது. தொடர்ந்து, இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.வரும், 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 8:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. 9:00 மணிக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படும். மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் வீதியுலாவில் எழுந்தருளுகிறார்.