கீழக்கரை: கீழக்கரை அருகே புல்லந்தை விசுவாசி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை புல்லந்தை, மாயாகுளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.