Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பிரகதீஸ்வரருக்கு 1000 கிலோ அரிசி ... ராஜேந்திர சோழனின் வெற்றியை நிரூபிக்கும் கல்வெட்டு அழிப்பு : ஆய்வாளர்கள் அதிர்ச்சி! ராஜேந்திர சோழனின் வெற்றியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3,500 கிலோ அரிசியில் தயாரான சாதம்: கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
3,500 கிலோ அரிசியில் தயாரான சாதம்: கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

15 நவ
2016
11:11

பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 3,450 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தால், அன்னா பிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் உடையது. இங்கு, ஆண்டு தோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில், அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டுக்கான அன்னாபிஷேம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கணக்க விநாய கருக்கு மகாபிஷேகமும்; 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவ கிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று, 75 கிலோ அளவுள்ள, 46 மூட்டை, 3,450 கிலோ பச்சரிசியால் சாதம் சமைத்து, காலை, 11:00 முதல் மாலை, 4:15 மணி வரை, பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், 6 மணியளவில் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னா பிரசாதத்துக்காக தயாரிக்கப்பட்டு லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட சாதத்தில், 70 சதவீதம் மக்களுக்கும்; 20 சதவீதம் கால்நடைகளுக்கும், 10 சதவீதம் மீன்களுக்கும் வழங்கப்பட்டது.

பிரகதீஸ்வரருக்கு 600 கிலோ அரிசி : தஞ்சை பெரியகோவிலில், பிரகதீஸ்வரர் திருமேனிக்கு, 600 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம், 300 கிலோ எடை காய்கறி மற்றும் இனிப்பு வகையால் படைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, அன்னாபிஷேகம் செய்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar