பதிவு செய்த நாள்
25
நவ
2016
11:11
கோவை :மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கை தொகையாக, 28 லட்சம் ரூபாய் இருந்தது. கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலின் உண்டியல் எண்ணிக்கை நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கியது. பொது உண்டியல், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில், 24 லட்சத்து 35 ஆயிரத்து 128 ரூபாய் இருந்தது. அன்னதான உண்டியலில், 3 லட்சத்து, 9 ஆயிரத்து, 450 ரூபாய் இருந்தது. திருப்பணி உண்டியலில், 18 ஆயிரத்து 502 ரூபாய் இருந்தது. கோசாலை உண்டியலில், 77 ஆயிரத்து 189 இருந்தது. இது தவிர, 63.5 கிராம் தங்கமும், 730 கிராம் வெள்ளியும் இருந்தது. இத்தொகை, சோமையம்பாளையம், பாங்க் ஆப் இந்தியா கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது. உண்டியலில் உள்ள காசுகள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணியில், ராமலிங்க சவுடாம்பிகை கல்லுாரியை சேர்ந்த, 120 மாணவர்கள் பங்கேற்றனர். மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த, 20 பேரும், மருதமலைக்கோவிலை சேர்ந்த, 25 பணியாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.பன்னாரியம்மன் கோவில் துணைக்கமிஷனர் மாரிமுத்து தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர்.