பதிவு செய்த நாள்
26
நவ
2016
12:11
ஊத்துக்கோட்டை: கார்த்திகை மாதம் வெள்ளிக் கிழமையை ஒட்டி, நாகவல்லியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது, நாகவல்லியம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில், அதிகளவு பக்தர்கள் வந்து, அம்மனை வழிபடுவர்.நேற்று கார்த்திகை மாதம், வெள்ளிக்கிழமையை ஒட்டி, அம்மனுக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.