வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் பொன்னர்சங்கர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சக்திவிநாயகர், சக்திமுருகன், செல்லாண்டியம்மன், பொன்னர்சங்கர், பரிவார தேவதைகள் ஆகியதெய்வங்களுக்கும் மணிகண்டசுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கோமாதாபூஜையுடன் தொடங்கி கடம் புறப்பாடாகி கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதன் ஏற்பாடுகளை பொன்னர்சங்கர்கோயில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.