மேலுார்: மேலுார் அருகே தெற்குப்பட்டியில் உதிரகாளியம்மன் கோவில், திருவாதவூர் துரோபதையம்மன் கோவில், அரிட்டாபட்டி அகிலாண்டவள்ளி சமேத ஆலவாய் அழகன்நம்பி ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேகத்தில் உலகுபிச்சன்பட்டி, நரசிங்கம்பட்டி, மேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.