பதிவு செய்த நாள்
09
டிச
2016
12:12
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் வரும் 12ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், வரும் 12ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு வழிபாடுகள் நடக்கிறது. கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, சங்கு கன்னர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றி பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்வர். இரவு 7:30 மணிக்கு சொக்க பனை என்னும் பெரும் தீ ஏற்றி வழிபாடு நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 9:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கிரிவல காட்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்து வருகிறார்.