Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷம் விண்ணதிர ... திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகா தீபம்: இன்று தீர்த்த உற்சவம் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2,668 அடி உயர மலையில் மகா தீபம் : திருவண்ணாமலையில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2016
10:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Default Image
Next News

தொடர்ந்து, அனைத்து சன்னதிகளிலும், தீபங்கள் ஏற்றப்பட்டன. மாலை, 4:30 மணிக்கு, பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரத்தின் முன் எழுந்தருளி, தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 5:59 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடி மரம் முன் எழுந்தருளி, நடனமாடியவாறு பக்தர்களுக்கு, ஒரு நிமிடம் காட்சியளித்தார். அப்போது, காலையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின், ஐந்து மடக்கு விளக்குகளையும் கொண்டு வந்து, கொடிமரத்தின் முன் தீபம் ஏற்றப்பட்டது. அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில், ஐந்து தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, அவற்றை, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காண்பித்தனர். இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷங்களுடன், தரிசனம் செய்தனர்.

தீபம் தெரியாமல் பக்தர்கள் ஏமாற்றம் : திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை முதலே மேக மூட்டத்துடன், சாரல் மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்றனர். மாலை, 3:00 மணிக்கு பலத்த மழை பெய்ய துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட போது, மழையாலும், பனி மூட்டத்தாலும், தீபம் கீழே இருந்த பக்தர்களுக்கு தெரியவில்லை. மாலை, 7:30 மணி வரை காத்திருந்தும் தீபம் தெரியவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar