Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ... சுப்ரமணியர் கோவிலில் 108 திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுபதேஸ்வரர் குடைவரை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கிரிவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2016
01:12

திருநெல்வேலி: நெல்லை அருகே பழமையான குடைவரை பசுபதேஸ்வரர் கோயிலில் நடந்த கிரிவலம் வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே திருமலாபுரத்தில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கி.பி 750 குடைவரை கோயில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு வருணாச்சி மலை என்று பெயர். வருணாச்சிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. குன்றின் வடக்கு திசையில் உள்ள குடைவரை முழுமையடைந்த நிலையில் சிற்பங்களுடன் அழகாக காட்சி தருகிறது. இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரால் இக்குடவரை பசுபதேஸ்வரர் குடவரை என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நான்கு கரம் கொண்ட விஷ்ணுவின் இருபுறமும் இருக்கின்ற உருவங்கள் வணங்கிய நிலையில் உள்ளன. மேலிரு கரங்கள் சங்கு கரம் ஏந்தியிருக்க கீழ் இரு கரங்கள் தொடையை தொட்ட வண்ணம் காட்டப்பட்டுள்ளன. விஷ்ணுவின் அருகில் விநாயகர் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. மறுபுறம் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.

கருவறையில் ஒற்றை கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் லிங்க வடிவில் உள்ளார். மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த வளாகம் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை திருநாளில் மட்டும் இக்கோயிலில் சிறப்பான வழிபாடுகள் நடக்கிறது. நேற்று கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சிவனடியார்களின் கிரிவலம் கோலகலமாக நடந்தது. காலையில் யாகசால பூஜை, மதியம் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சிவனடியார்கள் கலந்து கொண்ட கிரிவலம் நடந்தது. தொடர்ந்து 108 கார்த்திகை தீபம் ஏற்றுதலும், மதியம் சிறப்பு அன்னதானமும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar