Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி கோவில் உண்டியலில் ... உடுமலை அருவியில் குளிக்க பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டு திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2016
12:12

துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தேரி குடியிருப்பு கற்கு வேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேரி குடியிருப்பு செம்மணல் பரந்த அடர்ந்த வனப்பகுதியில் கற்குவேல் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கற்குவேல் அய்யனார், பூரணம், பொற்கலை இரு தேவியருடன் காட்சி தருகிறார். இங்கு பேச்சியம்மன், சுடலைமாடன், பெரியாண்டவர், வன்னியராஜா, பொன்காத்த அய்யன் போன்ற கணக்கற்ற தேவைதைகளும் வீற்றிருக்கின்றன. இப்பகுதியில் அநீதிகள் தலை துாக்கியபோது அதனை அழித்து நீதியை நிலை நிறுத்தினார் அய்யன். அந்த நாள் கள்ளர்வெட்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கள்ளர் வெட்டு திருவிழா கடந்த நவ.16 ம் தேதி பகல் 12 மணியளவில் அய்யனுக்கு சிறப்பு அபிேஷகம் பூஜைகளுடன் துவங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், மாக்காப்பு, தீபாரதனை, மாவிளக்கு, திரு விளக்கு பூஜைகள் நடந்தது. உற்சவர் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவில் நேற்று காலை 6 மணிக்கு பால்குடம் எடுத்தனர். தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வந்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 4.45 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் இளநீர் வைக்கப்பட்டது. இந்த இளநீரை கோயில் பூசாரி வெட்டினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின் அப்பகுதியில் இருந்து பனித மண் சேகரித்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar