பதிவு செய்த நாள்
16
டிச
2016
12:12
திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், 10 நாட் களில் பக்தர்கள், 32.76 லட்சம் ரூபாய் ரொக்கம், 339 கிராம் தங்கத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை வழிபட்டு, தங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த வகையில், 10 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில், 32 லட்சத்து, 76 ஆயிரத்து, 635 ரூபாய் ரொக்கம், 339 கிராம் தங்கம், 3,550 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.