பதிவு செய்த நாள்
23
டிச
2016
11:12
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 15 க்கு பின்னர் நேற்று மீண்டும் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் 18 லட்சத்து 58 ஆயிரத்து 314 ரூபாய் ரொக்கம், தங்கம் 11 கிராம், வெள்ளி ஒரு கிலோ 490 கிராம் காணிக்கையாக கிடைத்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் எண்ணினர்.