Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராதா மாதவ விவாஹ மஹோத்ஸவ விழா கரூர் கோட்டையண்ணன் கோவிலில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2016
02:12

சேலம்: சேலம் தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சேலம், அரிசிபாளையம், குழந்தை இயேசு பேராலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை துவங்கியது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, இயேசு பிறப்பை குறிக்கும் வகையில், பங்குத்தந்தை கிரகோரிராஜன், இயேசுவின் சொரூபத்தை கையில் எடுத்து, மக்கள் இடையே காட்டி, அங்குள்ள குடிலில் வைத்து ஜெபித்தார். ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார், அழகாபுரம் மிக்கேல் ஆதிதூதர், சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர், செவ்வாய்ப்பேட்டை ஜெயராக்கினி உள்ளிட்ட ஆலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ., ஆலயத்தில், ஆயர் மில்லர் ஜெயபால், அஸ்தம்பட்டி இம்மானுவேல் தேவாலயத்தில், ஆயர் அகிலன், ஜங்ஷன் திருத்தல ஆலயத்தில், ஆயர் கெவின் தலைமையில், அதிகாலை, 4:00 முதல், 6:00 மணி வரையும், காலை, 11:00 முதல், மாலை, 5:00 மணி வரையும், பிரார்த்தனை நடந்தது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 55 தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

* வாழப்பாடி பத்தாம் பத்திநாதர் தேவலாயத்தில் குடில்கள் அமைக்கப்பட்டன. அங்கு, ஏராளமானோர் பங்கேற்று, வழிபாடு செய்தனர். ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கிறிஸ்தவ தேவலாயம், ரயிலடி தெரு சி.எஸ்.ஐ., தேவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில், நேற்று முன்தினம் இரவு, சிறப்பு கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து, கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள், சமூக நல்லிணக்கமாக, பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினர். செந்துறையில், பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் ஜெயராஜ் தலைமையில், புனித சூசையப்பர் ஆலயத்தில் கூட்டுத்திருப்பலி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar