Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பில் வைகுண்ட ... மலையடி அய்யனார் கருப்பணசாமி கோயில் திருவிழா மலையடி அய்யனார் கருப்பணசாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா... வாசுதேவா’ கோஷம் முழங்க திருப்பூர் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
11:01

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, கோலகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், முதல் நாள் இரவிலிருந்து காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். திருப்பூரில் புகழ் பெற்ற ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும், சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு விழாவில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மோகினி அலங்காரம், ஸ்ரீ நாச்சியாளர் திருக்கோலம், திருவீதி உலா நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு ஸ்ரீ வீரராகவப் பெருமாளுக்கு திருமஞ்சனம், மகா அபிஷேகம் நடத்தப்

Default Image
Next News

பட்டது.

காலை, 5:30 மணிக்கு, பரமபதவாசல் வழியாக, நம்பெருமாள் எழுந்தருளி, கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின், கருடவாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலாவாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவையொட்டி, நேற்று முன்தினம், இரவு, 11:00 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுவாமி தரிசனத்துக்கு வசதியாக, மூங்கில் கம்பு வரிசை அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மொபைல் டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. விழாவில், பங்கேற்க பக்தர்களுக்கு, ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில், 1.18 லட்சம் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டன. காலை முதல் மாலை வரை, பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில்,கேசரி வழங்கப்பட்டது.  ண திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், திருப்பூர் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு சொர்க்காவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பரம்பத வாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோவில்வழியில் உள்ள பெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் காலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு, கருட சேவை தரிசனம், தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. ண திருப்பூர் ராயபுரம், ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், காலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவிநாசி ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், பெருமாநல்லுõரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் கோவில், கருவலுõர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கே.செட்டிபாளையத்தில் உள்ள செல்வ விநாயக பெருமாள், திருவரங்கன் ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், மொண்டிபாளையம், வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளிட்ட, திருப்பூர், அவிநாசி வட்டாரத்திலுள்ள பெருமாள் கோவில்களில், நேற்று வைகுண்ட ஏதாதசி விழா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar