Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் 300 ஆண்டுகால ஆலயம் புதுப்பித்தல் பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுக்கு இருளில் ஒளிரும் குச்சிகள் தேவை:விபத்தில் சிக்குவதை தடுக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2017
12:01

பழநி:தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக இருளில் ஒளிரும் குச்சிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பழநி தைப்பூச விழாவிற்காக மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இரவு நேரத்தில் ரோட்டோரங்களில் நடந்துசெல்லும்போது, வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் நடக்கிறது. தைப்பூச விழா 10 நாட்களுக்கு முன் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மஞ்சள், சிகப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட ஒளிரும் குச்சிகள் வழங்கப்படும். இது பழநி-திண்டுக்கல் ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பழநிகோயில் நிர்வாகம், போலீசார் இணைந்து வழங்குவர்.

விபத்துகள் அதிகரிப்பு: தற்போதே பழநி-திண்டுக்கல் ரோட்டில் தினமும் நுாற்றுக்குமேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். விபத்தில் சிக்கி இதுவரை 3 பக்தர்கள் உயிர் இழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் காலையில் மதுரையை சேர்ந்த இரண்டு பக்தர்கள் மீது சரக்குவேன் மோதி காயமடைந்தனர். இவ்வாறு தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது. இனிவரும் பொங்கல் விடுமுறையில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்களின் நலன் கருதி உடனடியாக இருளில் ஓளிரும் குச்சிகளை வழங்க பழநி கோயில் நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar