Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவதி அம்மன் கோவில் திருவிழா அவிநாசி கோவிலில் ஆடல் வல்லானுக்கு ஆனந்த அபிஷேகம் அவிநாசி கோவிலில் ஆடல் வல்லானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபுரம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2017
12:01

ராசிபுரம்: மாவட்டம் முழுவதும், சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, தர்மசம்வர்த்தினி சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு யாக பூஜை, சுவாமிக்கு திருக்கால்யாணம் நடந்தது. அதில், பல்வேறு பகுதி களில் இருந்து வந்த பக்தர்கள், சீர் வரிசை கொண்டு வந்து சமர்ப்பித்தனர். பின், சுவாமி, உமா மாகேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று அதிகாலை, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, இரண்டு கால வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. நடராஜர், சிவகாம சுந்தரி மற்றும் சுந்தரருக்கு பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவி கிராமத்தில், பழமை வாய்ந்த செண்பக ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்றாம்ஆண்டு ருத்ரஹோமம் மற்றும் ஆருத்ரா அபி ஷேக விழா நடந்தது. அதிகாலை, 4:15 மணி முதல், விநாயகர் மற்றும் நவக்கிரஹ வழிபாடு, ருத்ர யாகம், உற்சவர் புறப்பாடு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளையம், ப. வேலூர் என, மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar