Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் அலைமோதிய ... திருவண்ணாமலை கோவிலில் மறு ஊடல் விழா: பக்தர்கள் வழிபாடு திருவண்ணாமலை கோவிலில் மறு ஊடல் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாற்றில் தியராஜருக்கு இசை அஞ்சலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
09:01

தஞ்சாவூர்: திருவையாறு 170வது தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்துக்கொண்டு, தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்.

Default Image
Next News

திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள சத்குரு தியாகராஜர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது.170 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 13ம் தேதி மாலை துவங்கியது. அன்று முதல் தினமும் இன்னிசை கச்சேரி, வாய்ப்பாட்டு நடந்து வருகிறது. ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனையொட்டி காலை திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர் நினைவிடம் அமைந்துள்ள விழாப்பந்தலுக்கு வந்தனர். தியாராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பிறகு, மங்கள இசை துவங்கியது. சரியாக 9 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது.
தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...’ என்ற பாடல் பாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கொள ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...’ என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘ஸாதிஞ்செநெ ஓ மநஸா...’ என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...’ என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...’ ஆகிய பாடல்களை ஆயிரத்திற்கு மேற்பட்ட கலைஞர்கள் ஒருமித்து பாடி இசைஅஞ்சலி செலுத்தினர். இதில் புல்லங்குழல் பிரபஞ்சம் வாசிக்க, சுதா ரகுநாதன், மஹதி ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்று கீர்த்தனைகளை பாடினர். மிருதங்கம் சிவராமன், தஞ்சை முருகபூபதி. பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும் நாதஸ்வர கச்சேரி, பின்னர் உபன்யாசம் நடந்தது. இரவு 8 மணிக்கு மல்லாரியுடன் வீதி உலா நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar