கோவிலில் சுவாமிக்கு காணிக்கை செலுத்துவது கட்டாயமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2017 04:01
கட்டாயம் என்பதில்லை. ஆனால் நாம் செலுத்தும் காணிக்கையைக் கொண்டுதான் கோவில்களைப் பராமரிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகி விட்டது. மக்கள் நலம்பெற ஊர்தோறும் கோவில்களை நிர்மாணித்து, அதன் பராமரிப்புக்காக அரசர்கள் பெரும் பொருளை ஒதுக்கினார்கள். நிலங்கள் மற்றும் பிற சொத்து மூலம் கோவில்களுக்கு வருமானம் குறைவின்றி கிடைத்தது. அப்போது பக்தர்களின் காணிக்கை வேண்டப்படாமல் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலங்களெல்லாம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கோவில்களின் பராமரிப்பு பக்தர்களின் காணிக்கையை நம்பியிருக்க வேண்டிய சூழலும் உருவாகிவிட்டது. நாம் நலம் பெறவேண்டி நிர்மாணிக்கப்பட்ட கோவில்கள் வருமானம் இல்லாமல் பூஜைகள் நின்றும் பழுதடைந்தும் உருமாறி வருவதைப் பார்த்தாவது எல்லாரும் காணிக்கை செலுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். அரசாங்கமும் கோவில் குத்தகைதாரர்களிடம் கடும் நடவடிக்கை எடுத்து வசூல் செய்ய வேண்டும். கோவிலில் பூஜை நின்றால் சரியான அரசாட்சியிருக்காது, மழை பெய்யாது, கள்ளர் பயம் மிகும் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் பாடியுள்ளார். இன்று நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளும் அப்படித்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பூஜைகள் தொடர உதவுங்கள்.