கிள்ளை: கிள்ளை அருகே சி.முட்லுார் கன்னித்திருவிழாவில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து வழிபட்டனர். திருமணமாகாத ஆண்கள், பெண்கள் காணும் பொங்களில் இருந்து 10ம் நாள் கண்ணித்திருவிழா கொண்டாடி ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆ ற்றில் கரை த்து வழிபாடு நடத்தினால் வரும் சித்திரை, வைகாசி மாத ங்களில் திருமணம் நடக்கும் என்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர். இதனால் கடந்த 159 ஆண்டுகளாக சி.முட்லுாரில் கன்னதித்திருவிழா வெகு விமர்சியாக தை மாதத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான விழா நேற்று துவங்கியது. சி.மு ட்லுார் ஊராட்சியில் உள்ள 15 கிராமங்களில் திருவிழா வெகு விமர்சியாக நடந்தது. காலை களி மண்ணினால் வடிவமைக்கப்பட்ட கன்னி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வீதிகள் தோறும் சென்று அனைத்து கன்னிகளும் ஒருங்கிணைத்து ஊர்வலமாக திருமணமாகாத ஆண்கள், பெண்கள் கோலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கும்மியடித்து ஆற்றில் எடுத்துச் சென்று கரைத்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கிள்ளை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.