Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண ... சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசிவிசுவநாதர் கோயிலில் நாளை திருக்கல்யாண தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2011
11:10

தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் நாளை (22ம் தேதி) திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடக்கிறது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் நடந்தது. விழாவின் ஏழாம் நாளான நேற்று பல்லக்கு சயனத்தில் அம்பாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் எட்டாம் நாளான இன்று (21ம் தேதி) அம்பாள் கிளி வாகனத்தில் பவனி வருகிறார். ஒன்பதாம் நாளான நாளை (22ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. காலையில் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி நிலை வந்து சேர்ந்ததும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தென்காசி நகராட்சி தலைவராக வெற்றி பெறுபவர் முதன் முதலாக காசிவிசுவநாதர் கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்கிறார். இரவு சிறப்பு தீபாராதனை வழிபாட்டிற்கு பின்னர் அம்பாள் பல்லக்கில் பவனி வருகிறார். விழாவின் இறுதி நாளான வரும் 24 தேதி காலையில் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறார். மாலையில் தெற்கு மாசி வீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு அம்மன் சன்னதி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. தென்காசி வடக்கு ரதவீதியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலை தோண்டப்பட்டு முதல் கட்டமாக ஜல்லி நிரப்பும் பணி நடந்தது. தேரோட்டம் நடப்பதால் அவசர அவசரமாக சாலையை சமப்படுத்தும் பணி நேற்று நடந்தது. தேரோட்டம் நடந்து முடிந்த பிறகு சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar