Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! குடிமக்களைத் திருத்தும் ஜயா ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உணவின்மீது வெறுப்பா இதற்கும் ஒரு விரதமிருக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
05:02

மாசி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். பிப்.22ல் (மாசி 10) இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஷட்’ என்றால் ஆறு’. திலா’ என்றால் எள்’. எள்ளை  அரைத்து உடலில் பூசிக் கொள்ளுதல், அந்த எள்ளுடன் நீராடுதல், எள்ளைத் தானமாகக் கொடுத்தல், எள்ளை வைத்து ஹோமம் செய்தல், எள்ளையும் நீரையும் புனித தீர்த்தங்களில் இறைத்தல், எள்ளுருண்டை சாப்பிடுதல் என ஆறு வகையாக இந்த நாளில் எள்ளை உபயோகிக்க வேண்டும். இப்படி செய்தால் கொலை செய்த பாவம், பசுவைக் கொன்ற பாவம், திருடிய பாவம் போன்றவை கூட தீர்ந்து விடும். மாசி மாதத்தின் முதல் வாரத்தில், ஏதாவது ஒருநாளில் பசுமாடு சாணமிடும் போது, அது தரையில் விழாதபடி தரையில் துணி விரித்து பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த சாணத்துடன் எள், பருத்திக்கொட்டை சேர்த்து,  பூஜை அறையிலோ அல்லது மாட்டுக்கொட்டிலிலோ வைத்து விட வேண்டும். அந்தக் கலவை, பவுர்ணமி வரை காயாமல் ஈரப்பதத்துடன் இருந்தால் நமது பாவம் அனைத்தும் விலகி விட்டதாக ஐதீகம். இதை புலஸ்திய முனிவர் சொல்லியுள்ளார். இந்த விரத நாளில் பெருமாளுக்கு பூசணிக்காய், தேங்காய், கொய்யாப்பழம், கொட்டைப் பாக்கு  ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். ஒரு அந்தணருக்கு செம்பு, செருப்பு, குடை, கரும்பு, எள்ளுடன் கூடிய பாத்திரம், முடிந்தால் கருப்பு நிற பசு ஆகியவற்றை தானமாகக் கொடுக்க வேண்டும். உணவைக் கண்டாலே வெறுப்பு என்பவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதன் மூலம் அதன் மீது பிரியம் வரும். உடல்நிலை நன்றாக இருக்கும். வீட்டில் உணவுப்பஞ்சமும் வராது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 
temple news
செஞ்சி; கொங்கரப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் ஆடி பெரிய விழா நடந்தது.செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு ... மேலும்
 
temple news
கும்பகோணம் ; காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய விழாவான ஆடிப்பெருக்கு விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar