Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் தகவல் ... இன்று பீஷ்ம ஏகாதசி: விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த நாள்! இன்று பீஷ்ம ஏகாதசி: விஷ்ணு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரை பக்தர்கள் புத்துணர்விற்கு இயந்திரங்கள் மூலம் மசாஜ்
எழுத்தின் அளவு:
பாதயாத்திரை பக்தர்கள் புத்துணர்விற்கு இயந்திரங்கள் மூலம் மசாஜ்

பதிவு செய்த நாள்

07 பிப்
2017
11:02

பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் உடல் சோர்வு, கால்வலியை போக்க  ஒட்டன்சத்திரத்தில் நவீன மசாஜ் இயந்திரங்கள் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழநி தைப்பூச விழாவிற்கு ஆண்டுதோறும்  காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்  மொத்தமாக மூலச்சத்திரத்தில் ஒன்றுசேருகின்றனர்.

70 கி.மீ., முதல் 250 கி.மீ., துாரம் வரை நடந்துவரும் பக்தர்கள் கால் வழி, முழங்கால் வலி, முதுகுவலி உடல் அசதியால் தொடர்ந்து  நடக்கமுடியாமல் சோர்வு அடைகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் உடல்வலியை போக்கி புத்துணர்வுபெற, திருவண்ணாமலை  சாரிட்டபிள் டிரஸ்ட் கோயில் சார்பில் பழநி தைப்பூசம் பாத யாத்திரை அடியார்கள் இலவச மருத்துவ சேவை முகாம்  ஒட்டன்சத்திரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் சுளுக்கு, ரத்தகட்டு, மருந்துதடவி நீவிவிடுதல், பேண்டெஜ் போடுதல், பாதங்கள்,  மூட்டுவலி, உடல்சோர்வை நீக்க நவீன மசாஜ் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.  தலைவலி, காயம், உடல்வலிக்கு மருந்து  மாத்திரைகள் இலவசமாக தருகின்றனர். ஏராளமான பக்தர்கள் சிகிச்சைபெற்று செல்கின்றனர். பிப்.,5 முதல் 9 வரை மருத்துவ சேவைகள்  வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.  இதுகுறித்து சிவகங்கை பக்தர்கள்  மூர்த்தி, ராமசாமி கூறுகையில்,“ கடந்த ஒருவாரமாக பாதயாத்திரையாக நடந்துவருகிறோம். வரும்வழியில் ரோடுமோசமாக உள்ளதால்  பாதம்வெடிப்பு, மூட்டுவலி, உடல்வலி அதிகமாக உள்ளது. ஒட்டன்சத்திரம் மருத்துவமுகாமில் நவீன மிஷின் மூலம் சிகிச்சை  பெற்றோம். தற்போது வலிகள் குறைந்துள்ளது.”என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழாவின் நான்காவது வாரத்திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருமலை; திருப்பதியில் சிராவண பவுர்ணமியை முன்னிட்டு, திருமலை கோவிலில் சிரவண உபகர்மா நடைபெற்றது. இதன் ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ஆடி மாத பவுர்ணமி இரண்டாம் நாளாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar