Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ... பக்தர்களின் சரண கோஷத்துடன் பழநியில் தைப்பூசத் தேரோட்டம் பக்தர்களின் சரண கோஷத்துடன் பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் தைப்பூச விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2017
11:02

துாத்துக்குடி, திருச்செந்துார் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில் தைப்பூச திருவிழா நடந்தது. இதற்காக தென் மாவட்டங்களில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், முருகன் வேடமணிந்து பக்தர்கள், ஆடல் பாடலுடன் பாதயாத்திரையாக திருச்செந்துார் வருகை தந்தனர். முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிேஷகம் நடந்தது. பின் காலை 7 .30 மணிக்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கடலில் புனித நீராடினர். பலர் கோயில் பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்தனர். உச்சிக்கால தீபாரதனை நடந்தது. அதனை தொடர்ந்து அலை வாய் உகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலை 6 மணிக்கு உபயதாரர்கள் சார்பில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. பின் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, கோயில் வந்து சேர்ந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவையொட்டி தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் திருச்செந்துாருக்கு இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar