பதிவு செய்த நாள்
18
பிப்
2017
12:02
திருத்தணி: முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று நடந்த மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம் கன்னிக்கோவில்மேடு,வல்லரசு நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 54 கலசங்கள் அமைத்து கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 6:15 மணிக்கு விநாயகர், முருகர், துர்க்கை, நாகம் மற்றும் மூலவர் முத்துமாரியம்மன் சிலைகளுக்கு, கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.