பதிவு செய்த நாள்
24
பிப்
2017
12:02
ஊத்துக்கோட்டை : ஷீரடி சாய்பாபாவிற்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால், சிறப்பு பூஜை நடந்தது. ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஷீரடி சாய்பாபா சன்னிதி உள்ளது. பக்தர்கள் பங்களிப்புடன் வைக்கப்பட்ட இந்த சாய்பாபா சிலைக்கு, ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு பூஜை நடத்தப்படும். நேற்று காலை, 8:30 மணிக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை, பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாய்பாபாவை வழிபட்டனர்.