Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துநாயகி அம்மன் கோயில் திருவிழா! வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலஞ்சி குமாரர் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2011
11:10

தென்காசி,: இலஞ்சி குமாரர் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இலஞ்சி குமாரர் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமான விழாவாகும். இந்த ஆண்டு இத்திருவிழா நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்தில் கொடிபட்டம் ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இரவு தீபாராதனையும், சுவாமி பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலையில் பூங்கோயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், அலங்காரம், இரவு தீபாராதனை சுவாமி திருவீதி உலா நடந்தது. மூன்றாம் திருவிழாவான இன்று (28ம் தேதி) முதல் 30ம் தேதி வரை தினமும் காலையில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், அலங்காரம், இரவு தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான 31ம் தேதி காலையில் அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலையில் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், கோயில் முன் வாயில் பகுதியில் சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி மர மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.வரும் நவ.1ம் தேதி காலையில் மூலவருக்கு முழுக்காப்பு, தீபாராதனை, இரவு தெய்வானை திருமணம், சுவாமி திரு வீதி உலா நடக்கிறது. நவ.2ம் தேதி காலையில் முழுக்காப்பு, தீபாராதனை, இரவு ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் தக்கார் கணபதி முருகன், நிர்வாக அதிகாரி தங்கப்பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.

குற்றாலநாதர் கோயில்: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. மாலையில் அபிஷேகம், இரவு தீபாராதனை, கோயில் உள் பிரகாரத்தில் சுவாமி உலா வருதல் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலையில் அபிஷேகம், இரவு தீபாராதனை மற்றும் கோயில் உள் பிரகாரத்தில் சுவாமி உலா வருதல் நடந்தது.இன்று (29ம் தேதி) முதல் 30ம் தேதி வரை தினசரி காலையில் அபிஷேகம், இரவு தீபாராதனை மற்றும் சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் உலா வருதல் நடக்கிறது. வரும் 31ம் தேதி காலையில் அபிஷேகம், மாலையில் ரத வீதியில் சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ.1ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் தக்கார் கவிதா பிரியதர்ஷினி, நிர்வாக அதிகாரி சுகுமாரன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar