தங்கத்தைப் புடம் போடப் போட அதன் உண்மைத்தன்மை தெரியும்: சுடர்விட்டுப் பிரகாசிக்கும். அதுபோல மாணவர்களுக்கு பல பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய அறிவை பொன்னாகச் சுடரச் செய்பவர் தாதுவாதி குரு. சந்தன மரமானது, தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணம் பரப்பி ரம்மியமான சூழ்நிலையை ஏற்படுத்துவதுபோல, தன்னிடமுள்ள ஆற்றலைத் தன் மாணவர்களுக்கு அளித்து மணம்வீசச் செய்பவர் சந்தன குரு. மாணவர்களிடமுள்ள ஆற்றலையும், சிந்தனையையும் தூண்டிவிட்டு, அவர்களை இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுவித்து பரப்பிரும்மத்தை நோக்கி அழைத்துச் செல்பவர் விசார குரு.