பதிவு செய்த நாள்
20
மார்
2017
10:03
சென்னை: ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பல கோடிரூபாய் மதிப்பிலான நிலத்தில், அறநிலையத்துறை வணிக வளாகம் அமைத்து, வருவாய்க்கு வழி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை , சவுக்கார்பேட்டையில் அமைந்துள்ளது ஏகாம்பரேஸ்வரர் கோவில். 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனி தோஷம் நீங்கும் பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது. வாடகை அதிகம் இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், பல இடங்களில் உள்ளன. அதை , அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. இவற்றில் உயர் நீதிமன்றம் அருகில், லிங்கிச்செட்டித்தெருவில் உள்ள , ஒரு கிரவுண்டு, 1,175 ச துர அடிமனையும் ஒன்று. இந்த மனையை சுற்றி, மொத்த வணிக நிறுவனங்கள், வங்கிகள், வழக்கறிஞர் அலுவலகங்கள் உள்ளன. அங்குள்ள கட்டடங்களின் வாடகை அதிகம் வசூலிக்கப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான இந்த மனைக்கு, சாதாரணமாக,ஆண்டிற்கு, 24 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகை கிடைக்க வாய்ப்பு உண்டு. உபயோகிக்க வேண்டும் அதே நேரம் அந்த மனையில், வணிக வளாகம் கட்டி விட்டா ல், அறநிலையத்துறைக்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும். ஆனால், அந்த மனை எந்த பயன்பாடும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது ஆக்கிரமிப்பாளர்கள் கண்களை உறுத்தி வருகிறது. எனவே , அக் கோவிலுக்கு சொந்தமான இடத்தை , வருவாய் தரும் வகையில் அறநிலையத்துறை உபயோகப்படுத்த வேண்டும் என, ஆன்மிக நலவிரும்பிகள் கோரிஉள்ளனர்.