Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நார்த்தாமலை முத்துமாரியம்மன் ... சிவசிவ கோஷம் முழங்க ஜம்புகேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் சிவசிவ கோஷம் முழங்க ஜம்புகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மம் அவசியம்; அதர்மம் கூடாது:சிருங்கேரி சுவாமி அருளுரை
எழுத்தின் அளவு:
தர்மம் அவசியம்; அதர்மம் கூடாது:சிருங்கேரி சுவாமி அருளுரை

பதிவு செய்த நாள்

28 மார்
2017
12:03

மதுரை;எல்லோரும் தர்மம் செய்ய வேண்டும். அதர்மம் செய்யக்கூடாது. பகவத் சிந்தனையுடன் இருக்க வேண்டும், என சிருங்கேரி சங்கர மடம் பாரதீ தீர்த்த சுவாமி அருளுரை வழங்கினார். மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதா கோயிலுக்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி நேற்று மாலை வந்தனர். தர்மகாரியதரிசி சங்கரநாராயணன், பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமையில் பூரண கும்ப மரியோதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதீ தீர்த்த சுவாமி பேசியதாவது: மதுரைக்கும், சிருங்கேரி மடத்துக்கும் நுாற்றாண்டு கால தொடர்பு உண்டு. இதற்கு அம்மன் சன்னதி யில் உள்ள சிருங்கேரி மடம் சாட்சியாக விளங்குகிறது. அந்த மடத்தில் ஆச்சாரியார்கள் தங்கியிருந்து சீடர்களுக்கு அருளுரை வழங்கி வந்தனர். மீனாட்சி அம்மன்கோயிலில் சந்திர மவுலீஸ்வரர் பூஜை, ஆராதனைகள் செய்து வந்தனர். அந்த வரிசையில் நானும் மீனாட்சிஅம்மன் கோயிலில் சந்திர மவுலீஸ்வரர் பூஜைகள் நடத்தி வருகிறேன். நான், எனது ஆச்சாரியார் மீது எவ்வளவு பக்தி, பற்று வைத்திருந்தேனோ, அதே பக்தியும், பற்றும் என் மீது சீடர் (விதுசேகர பாரதீ சுவாமி) வைத்துள்ளார்.

இது குரு, சீடர் ஒற்றுமையை குறிக்கிறது. எனது குருநாதன் என்னை சீடர்க்ளுக்கு அறிமுகம் செய்து இவர் தான் அடுத்த குரு, என்றார். அதே போல் சீடரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டிய கடமை என்னிடம் உள்ளது. அதற்காகவும், மகாருத்ரம் சத்சண்டீ பாராயணம், சந்திர மவுலீஸ்வர பூஜை செய்வதற்காகவும் மதுரை வந்துள்ளேன்.எல்லோரும் தர்மம் செய்ய வேண்டும். அதர்மம் செய்யக்கூடாது. பகவத் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்றார். விதுசேகர பாரதீ சுவாமி உபன்யாசம் செய்தார். இன்று (மார்ச் 28) முதல் ஏப்.,2 வரை காலை 7:30 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பாத பூஜை, மாலை 5:00 மணிக்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமியின் உபன்யாசம். இரவு 8:00 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar