Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருமலையில் சேவா டிக்கெட்: தகவல் பெற தொடுதிரை வசதி! திருமலையில் சேவா டிக்கெட்: தகவல் பெற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரத்தில் நவ., 10ல் அன்னாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 நவ
2011
10:11

அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் எனப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி அன்னாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். 11ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்த சோழ பேரரசின் தலைநகராகவும் இவ்வூர் விளங்கியது. தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், தனது (கி.பி. 1012-1044) ஆட்சி காலத்தில், கங்கை கரை வரை படையெடுத்து சென்று வடபுலத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினான்.இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான், உலகிலேயே மிக பெரிய சிவலிங்கம் என போற்றப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், இக்கோவில் கருவறை சுவரில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் இதமான வெட்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. இக்கோவிலில் சரஸ்வதியும், லெக்ஷ்மியும், தியான கோலத்தில் அமர்ந்துள்ளதால், ஞான சரஸ்வதி, ஞான லெக்ஷ்மி என அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.தற்போது ஐ.நா., சபையின் யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், தொன்று தொட்டு, ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளன்று நடந்து வந்த அன்னாபிஷேகம், இடையில் நின்று விட்டது. இந்நிலையில், காஞ்சி பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் முயற்சியால் 26 ஆண்டுக்கு முன், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் கும்பகோணம் சங்கரமடம் சார்பில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை மூலம் பெறப்படும் 100 மூட்டை அரிசியை கொண்டு, கோவில் வளாகத்தில் வடிக்கப்படும் சாதத்தால், அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, வரும் 10ம் தேதி, ஐப்பசி பவுர்ணமி நாளன்று நடக்கவுள்ள அன்னாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் சங்கரமடம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டம் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கம் வந்திருந்து அன்னாபிஷேகத்தை கண்டுகளிப்பது வழக்கம்.அதன்படி, பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி (உ.பி.), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் மார்ச் 19 அன்று அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் மரக்காயர்பட்டணம் பகுதியில் சீதாராம சுவாமிகள் ஞான யோகானந்த ஆசிரமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar