திருநெல்வேலி : நெல்லை கிறிஸ்துவ ஆலயத்தில் மாதாவின் கிரீடத்தை காணோம் என பங்குத்தந்தை போலீசில் புகார் செய்தார். திருநெல்வேலி டவுன், சாலியர் தெருவில், அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் இரவு துவங்கி ஈஸ்டர் பண்டிகையின் கொண்டாட்டங்கள்,சிறப்பு திருப்பலி நடந்தன. அங்கு மாதா சொரூபத்தின் தலையில் பொருத்தக்கூடி 250 கிராம் வெள்ளியில், 5 பவுன் தங்கமுலாம் பூசப்பட்ட கிரீடம் பாதுகாப்பாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். நேற்று மதியம் அதனை காணவில்லை. அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து ஆலய பொறுப்பாளர் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.