Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குற்றாலம் அருகே இந்து கோயில் கட்டி ... வெயிலுகந்தம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒட்டக,ஆட்டிறைச்சி தானத்துடன் பக்ரீத் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 நவ
2011
10:11

சென்னை : தமிழகத்தில், 60 ஒட்டகங்கள், ஆயிரக்கணக்கான ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு, இறைச்சி தானத்துடன் பக்ரீத் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில், ஏழைகளும் மாமிசம் உண்டு, மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆடு, மாடுகளைப் பலிகொடுத்து, இஸ்லாமியர்கள் இறைச்சி தானம் வழங்குவது வழக்கம். இது, குர்பானி எனப்படும். ஆரம்பத்தில், ஆடு, மாடுகளை குர்பானி கொடுத்தோர், சில ஆண்டுகளாக, அரபு நாடுகள் போன்று, ஒட்டகத்தை குர்பானி கொடுத்து வருகின்றனர். ஒட்டகத்தின் விலை அதிகம் என்பதால், ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்து, கூட்டு குர்பானி கொடுக்கின்றனர். இதற்காக, பத்து நாட்களுக்கு முன், ராஜஸ்தானிலிருந்து 60 ஒட்டகங்கள், ஆந்திரா வழியாகத் தமிழகம் வந்தன. பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடிய நிலையில், தமிழகம் முழுவதும், 60 ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்று, ஆயிரக்கணக்கான ஆடுகளும் குர்பானி கொடுக்கப்பட்டு, ஏழைகளுக்கு இறைச்சியைத் தானமாக வழங்கி, இஸ்லாமியர்கள் பக்ரீத்தை கோலாகலமாகக் கொண்டாடினர். "கடந்த ஆண்டில், 110 ஒட்டகங்கள் வரை, குர்பானி கொடுக்கப்பட்டன. அப்போது, ஒட்டகத்தின் விலை 25 ஆயிரம் ரூபாய் வரை தான் இருந்தது. தற்போது, 45 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்ததால், ஒட்டகங்கள் குர்பானி கொடுப்பது குறைந்துள்ளது என, இஸ்லாமிய அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறினார். இதையொட்டி, த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், பொது இடங்களைத் தேர்வு செய்து, சிறப்பு தொழுகைகள் நடத்தின. தமிழகம் முழுவதும், மசூதிகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar