விரதம் இருப்பவர்கள், காப்பு கட்டியவர்கள் ஊரை விட்டோ, ஆற்றைக் கடந்தோ செல்வது கூடாது. கோவில் கொடியேற்றப்பட்டால் ஊருக்கே காப்பு கட்டியது என நினைக்க வேண்டும். இதை கொடித்தடை என்பர். விழா சமயத்தில் தேவர்கள் வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தேவர்கள் நம்மிடம் வரும் போது அவர்களை வழிபட்டு, கவுரவிக்காமல் வெளியூர் செல்வது பொருத்தமில்லை.