திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2026 12:01
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவத்தில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ராப்பத்து 7ம் நாள் உற்சவம் முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சாரங்கபாணியாக பஞ்ச ஆயுதகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.