குருவாயூர் கோயிலுக்குப் போகிறவர்கள், பாஞ்ச ஜன்யம் விடுதிக்கு அருகில் ஒரு யானையின் கம்பீரமான சிலையைக் காணலாம். அது, கஜராஜன் கேசவன் என்ற பெயரில் 50 ஆண்டு காலம் குருவாயூரப்பனுக்குச் சேவை செய்து, ஒரு ஏகாதசியன்று மோட்சமடைந்த பக்த உள்ளத்தின் நினைவுச்சின்னம். ஒரு ஏகாதசி நாளில்தான் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தன் விஸ்வரூபத்தைக் காட்டி அருள்புரிந்தார். ஒரு ஏகாதசி நாளில்தான் மேல்பத்தூர் பட்டத்திரியின் முன் தோன்றிய குருவாயூரப்பன், புகழ்பெற்ற நாராயணீயம் இயற்ற ஊக்குவித்தார். அதே போல ஒரு ஏகாதசி நாளே கஜராஜன் கேசவன் யானைக்கும் மோட்சம் பெறும் நாளாக அமைந்தது. குருவாயூரப்பனைத் தரிசிக்க வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள், கஜராஜன் கேசவனையும் வழிபட்டுச் செல்கிறார்கள்.