காரைக்கால் மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 02:05
காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி மாரியம்மன் வீதியுலா நடந்தது. காரைக்கால் நெடுங்காடு மேலகாசாகுடி கிராமத்தில் மல்லிகேஸ்வரி மாரியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 8ம் தேதி மாரியம்மன் மற்றும் கடந்த 9ம் தேதி பத்ரகாளியம்மனுக்கு பூச்சொறிதல்,காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று கஞ்சிவார்த்தல்,சந்தனகாப்பு அலங்காரத்தில்,மாரியம்மன் முக்கிய பகுதிகளில் வீதியுலா நடந்தது. விழாவை முன்னிட்டு மல்லிகேஸ்வரி மாரியம்மனுக்கு பூ அலங்காரம்,அபிஷேக ஆராதனை மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிகளை கிராமவாசிகள்,ஆறு கிராமவாசிகள்,நடுத்தர தொழிலாளர்கள் சங்கம்,அனைத்து நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.