ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கே.அத்திக்கோம்பையில் காளியம்மன் கோயில் உள்ளது. ஊர்மக்கள் சார்பில் 3 நாட்கள் உற்சவ விழா நடந்தது. முதல் நாள் இரவு அம்மன் கரகம் பாலித்து, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. மறுநாள் காலை மாவிளக்கு, தீ சட்டி எடுத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது. கடைசிநாளன்று முளைப்பாரி ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.